×

கட்டுப்பாட்டை இழந்த மின்சார பஸ் மோதி 6 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: கான்பூரில் மின்சார பேருந்து ேமாதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே, இன்று காலை மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கிழக்கு கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் கூறுகையில், ‘போக்குவரத்துச் சாவடி வழியாக வேகமாக வந்த அந்த பேருந்து, அங்கிருந்த மூன்று கார்கள் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனங்களின் மீது சேதப்படுத்தியதுடன் லாரி மீது மோதி நின்றது. விபத்தில் 6 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்’ என்றார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post கட்டுப்பாட்டை இழந்த மின்சார பஸ் மோதி 6 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Kanpur ,
× RELATED ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி...