×
Saravana Stores

கடையம் அருகே விஷம் குடித்த தனியார் பள்ளி ஊழியர் சாவு

கேடிசிநகர், அக். 22: தென்காசி மாவட்டம், கடையம் போலீஸ் சரகம், கட்டளையூர் மேல தெருவை சேர்ந்த பாக்கியநாதன் மகன் ஜெயராஜ் (32). இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. இதனிடையே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். ஜெயராஜ் இடைக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடையம் அருகே விஷம் குடித்த தனியார் பள்ளி ஊழியர் சாவு appeared first on Dinakaran.

Tags : Katsinagar ,Jayaraj ,Bhakyanathan ,Upper Street ,Kadayam ,Saragam, Tenkasi District ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கான நோட்டீசை...