×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

திண்டுக்கல், ஜூலை 22: திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, ஏட்டு சந்தியாகு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சீலப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சீலப்பாடி மேற்கு குழிப்பட்டியை சேர்ந்த விஜய்(21) என்பதும், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் இருந்த 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...