×

ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது: சசிகலா, தினகரன் குறித்து முதல்வர் பழனிசாமி மறைமுக பேச்சு!!

கிருஷ்ணகிரி : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா சென்னை வந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், இரட்டை தலைமையிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம் என்று சசிகலாவுடன் சேர்ந்து டிடிவி தினகரனும் சபதம் போட்டிருக்கிறார்.இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ‘ஒரு போதும் அவர்களை அதிமுகவின் இணைக்க முடியாது சசிகலா, தினகரன் பற்றி மறைமுகமாக பேசினார். சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள்.  ஒரு போதும் அவர்களுக்கு அதிமுக தலை வணங்காது. அடிமட்ட தொண்டர்கள் தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும். டிடிவி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை ஒருபோதும் கைப்பற்ற முடியாது.என்றும் முதல்வர் கூறினார்….

The post ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது: சசிகலா, தினகரன் குறித்து முதல்வர் பழனிசாமி மறைமுக பேச்சு!! appeared first on Dinakaran.

Tags : cr ,paranisamy ,sasigala ,dinakaran ,Krishnagiri ,CM ,Palanisamy ,CM Palanisamy ,
× RELATED கழுகுமலை அருகே கோயில் கொடை விழா:...