×

ஒன்றிய அரசை கண்டித்து 28, 29ல் ஸ்டிரைக்: காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து 28, 29ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (டிசிடியூ) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. பொதுக்குழுவுக்கு மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர்கள் ஆமோஸ், சி.எம்.பொன்னுசாமி, அப்துல் காதர், நீலகிரி ராமசாமி, சாந்தா ராமதாஸ், தங்கராஜ், பொது செயலாளர்கள் கண்ணன், ஜி.கோதண்டன், சத்தியபாலன், கொள்கை பரப்பு செயலாளர் குமரி மகாதேவன் முன்னிலை வகித்தனர். எச்எம்எஸ் மூத்த தலைவர் சுப்ரமணியம், சஞ்சய் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் டிசிடியூ சார்பாக மாநிலம் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் ஆன்லைன் முறையை தமிழக அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். கவுரவ தலைவராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காப்பாளர்-பி.டி.ஷிவராமன், மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன், பொது செயலாளர்கள்- செங்கை கண்ணன், ஜி.கோதண்டன், சட்ட ஆலோசகர்- மணிகண்டன், ஆலோசகர்- வி.சத்தியபாலன், பொருளாளர் -ஆர்.ராஜேஷ், வடசென்னை மாவட்ட தலைவராக டி.எஸ்.தேசியமணி, மத்திய சென்னை- எஸ்.தனலட்சுமி, தென்சென்னை- மயிலை கணேஷ், திருவள்ளூர் வடக்கு- ஏ.தாஸ், திருவள்ளூர் தெற்கு- எம்.ரவிச்சந்திரன், செங்கல்பட்டு-ஆர்.ஸ்டலெ்லா மோத்தி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட தலைவர்கள், மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது….

The post ஒன்றிய அரசை கண்டித்து 28, 29ல் ஸ்டிரைக்: காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Congress Labor Union ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு