×

ஏடிஎம்மில் நூதனமோசடி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பட்டுபுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரலிங்கம்(52). விவசாயி. கடந்த மாதம் 28ம் தேதி பணம் எடுக்க கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் சென்றார். அப்போது, அருகில் இருந்த வாலிபரிடம் பணம் எடுத்து தரும்படி கூறினார். பின்னர் அந்த வாலிபர்  சந்திரலிங்கத்தின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து சந்திரலிங்கம் நேற்று வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் ரூ.93 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது ஏடிஎம் கார்டை சோதித்தபோது அது போலியானது என தெரியவந்தது. புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்….

The post ஏடிஎம்மில் நூதனமோசடி appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Chandralingam ,Pattupulli village ,Dinakaran ,
× RELATED பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு சொந்தமான...