×

துப்பரவு பணியாளருக்கு வரித்தண்டலராக பதவி உயர்வு : 20 வருடங்களுக்கு பிறகு முதல் முறை

பேரையூர்: டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு துப்புரவு பணியாளருக்கு வரித்தண்டலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் துப்புரவுபணியாளராக இருந்தவர் மூர்த்தி மகன் சுந்தரம் (40). இவருக்கு மதுரை கலெக்டரின் உத்தரவிற்கு இணங்க கல்வித்தகுதி அடிப்படையில் 20 வருடங்களாக துப்பரவு பணியாளராக இருந்தவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் துப்பரவு பணியாளர் வரித்தண்டலராக பதவி உதவி உயர்வு பெறுவதும் இதுவே முதல்முறையாகும்.

இதற்கான உத்தரவை மதுரை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கண்காணிப்பாளர் இப்ராஹிம்ஷா, செயல் அலுவலர்கள் கலையரசி, சின்னச்சாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் சுந்தரத்திற்கு வழங்கினார். எழுமலை பேரூராட்சியில் சுந்தரத்திற்கு வரித்தண்டலராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கலெக்டர் மற்றும் பேரூராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி பணியாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 3 குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்