×

உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்: இறுதிகட்ட பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

சண்டிகர்: பஞ்சாபில்உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் என்று இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், குரு ரவீந்தரதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதனால் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜ, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் மற்றும் அம்ரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டெல்லியை போன்று எப்படியாவது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பஞ்சாபின் முகாமிட்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது வாக்காளர்கள் கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.இந்நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இறுதிகட்டமாக ஜலாலாபாத் மற்றும் அபேஹர் தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் நேர்மையான ஆட்சி அமைக்கவும் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். பஞ்சாபில் நேர்மையான ஆட்சி அமைக்கப்படும். இந்த முறை பஞ்சாபை காப்பாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் என்றார்….

The post உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்: இறுதிகட்ட பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Chandigarh ,Punjab ,Punjab… ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு