×

உக்ரைன் நாட்டில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் வீடியோ பதிவு வெளியீடு: தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

காஞ்சிபுரம்: உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மருத்துவ மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவியுடன் தங்கியுள்ள 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக முதலமைச்சருக்கு, வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணத்தின் சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படிக்கிறார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதே மருத்துவ பல்கலைக்கழகத்தில் 6ம் ஆண்டு படிக்கின்றனர்.தற்போது ரஷ்யா போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், அங்குள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள், தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயஸ்ரீயுடன் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள், கூட்டாக சேர்ந்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், ரஷ்யா நாட்டின் தொடர் தாக்குதலால் அப்பகுதியில் எமர்ஜென்சி நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்களை கீழ்தளத்தில் தங்க வைத்துள்ளனர். தற்போது அவர்களது கையிருப்பில் குறைந்த அளவு உணவுகள் மட்டுமே உள்ளது. உணவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.மேலும், உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே மேல் தளத்தில் உணவு சாப்பிட்டு, மீண்டும் கீழ் தளத்தில் தங்குகின்றனர். அப்பகுதியில் இணையதளம், உணவு, குடிநீர் உள்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவைக்கு முற்றிலுமாக தடையானதால், அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, எங்களை மீட்பதற்கான அனைத்து துரித நடவடிக்கைகளையும் இந்திய நாட்டின் மத்திய, மாநில அரசுகளும், தமிழக முதலமைச்சர் அவர்களும் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் மீட்க வேண்டும் என கூறியுள்ளனர்….

The post உக்ரைன் நாட்டில் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் வீடியோ பதிவு வெளியீடு: தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Tamil Nadu ,Chief Minister ,Kanchipuram ,Kanchipuram District ,
× RELATED ‘தமிழ்நாடு நாள்’ கட்டுரை, பேச்சு போட்டிக்கு அழைப்பு