×

ஈரோடு பூம்புகாரில் புத்தாண்டு, பொங்கல் விழா கண்காட்சி விற்பனை

 

ஈரோடு, டிச.29: ஈரோடு, மேட்டூர் சாலை, பூம்புகார் விற்பனை நிலையத்தில் நேற்று புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கண்காட்சி விற்பனை துவங்கியது. ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கண்காட்சி விற்பனை நேற்று தொடங்கியது. வருகின்ற 18ம் தேதி, நடைபெற உள்ள இக்கண்காட்சியில் ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டு, சந்தன மரச்சிற்பம், கற்சிற்பங்கள், வெள்ளை மற்றும் கருப்பு உலோக சிற்பங்கள், வலம்புரி சங்கு, 1 முதல் 14 வகை ருத்ராட்சம், வாஸ்து உருளிகள், சந்தன கட்டைகள், பூஜை பொருட்கள்,

மொரதாபாத் கலை பொருட்கள், ஜெய்ப்பூர் வண்ண ஓவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், ஜெய்ப்பூர் நவரத்தின கற்கள், முத்து நகைகள், ஐம்பொன் வளையல்கள் போன்றவை விற்பனைக்கு உள்ளன. நாச்சியார் கோவில், சுவாமிமலை விளக்குகள், கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சை ஓவியங்கள், மொராதா பாத், ஜெய்ப்பூரில் இருந்து கலை பொருட்கள் வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. குறிப்பிட்ட பொருட்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post ஈரோடு பூம்புகாரில் புத்தாண்டு, பொங்கல் விழா கண்காட்சி விற்பனை appeared first on Dinakaran.

Tags : New Year, ,Pongal Festival Fair ,Erode Poombukar ,Erode ,New Year ,Phoombucar ,Mettur Road ,Pongal festival ,Poombukar ,Dinakaran ,
× RELATED சீனாவில் இலையுதிர்க் காலத் திருவிழா:...