×

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை விநியோகிக்கும் தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை விநியோகிக்கும் தனியார் நிறுவனத்தில் ரெய்டு நடைபெற்றது. திருச்செங்கோட்டில் கிருஷ்டி சத்துமாவு, முட்டை விநியோக நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. சென்னையில் மட்டும் கிருஷ்டி க்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. உரிமையாளர் குமாரசாமி வீடு, அலுவலகத்தில் 500 அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். குமாரசாமி நண்பர் ஜெயபிரகாஷ் என்பவரின் அக்கினி பில்டர்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களில் கிளை அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அரசின் குழந்தை வளர்ச்சி திட்டத்துக்கு கிருஷ்டி  தயாரித்து கொடுத்து வருகிறது. போலி நிறுவனம் தொடங்கி அரசுக்கு முட்டை சப் ளை செய்வதாக எழுந்த புகாரில் நடவடிககி எடுக்கப்பட்டுள்ளது.

ஆடிட்டர் வீட்டிலும் சோதனை


கிருஷ்டி நிறுவனத்தின் ஆடிட்டர் ராமகிருஷ்ண ன் சங்கர் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

அடுக்கடுக்காக போலி நிறுவனம் தொடங்கி பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது...