×

‘‘இன்ஸ்டாகிராமில் தொலைந்த வாழ்க்கை’’கடத்திச் சென்ற சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்ைல; கொடூர வாலிபர் கைது

அண்ணாநகர்: இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமியை கடத்திச்சென்று வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், கடந்த 27ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’எனது 16 வயது மகளை காணவில்லை. அவளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், திருமங்கலம் போலீசார், சிறுமியின் படத்தை அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பிவைத்து விசாரித்தனர்.இந்தநிலையில், மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் வாலிபர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு அங்கிருந்து வாலிபரையும் சிறுமியையும் மீட்டனர். பின்னர் அவர்களை திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். சிறுமியிடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரணை நடத்தினார்.அப்போது சிறுமி கூறியதாவது;இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகாதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டோம். இதன்பின்னர் நான் என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என் கழுத்தில் இருந்த தாலியை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்தேன். ஒருநாள் பெற்றோர் கண்டுபிடித்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். என்னை கடுமையாக எச்சரித்தனர். உனக்கு தாலி கட்டிய நபர் யார் என்று விசாரித்தனர். போலீசில் புகார் கொடுத்ததால் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு சிறுமி கூறினார்.இதன் அடிப்படையில், சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் மிளவுஅழகன்(19) என்பவரை கைது செய்து விசாரித்தனர். ‘‘இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக காதலிப்பதாக கூறி சிறுமியை கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து கடத்திச்சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு கோயிலில் மீண்டும் தாலிகட்டி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிளவு அழகனை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்….

The post ‘‘இன்ஸ்டாகிராமில் தொலைந்த வாழ்க்கை’’கடத்திச் சென்ற சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்ைல; கொடூர வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai ,
× RELATED வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு...