×

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே பலி… ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா, 928 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,247 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,45,527 ஆக உயர்ந்தது.* புதிதாக ஒருவர் மட்டுமே இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 928 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,11,701 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,860 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,86,72,15,865 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 16,89,995 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே பலி… ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா, 928 பேர் குணமடைந்தனர்!! appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Delhi ,
× RELATED விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு.....