×

கொல்லிமலை அருகே பயங்கரம் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை: நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை?.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வளப்பூர்நாட்டில், நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். நரபலிக்காக இரட்டைக் கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு அருகே உள்ள ஆலவாய்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி(48). இவரது சகோதரர் ரங்கன்(45). இருவரும் விவசாயம் செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40). இவர்கள் 3 பேர் இடையே, கடந்த ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை, வளப்பூர்நாட்டில் உள்ள சுடுகாட்டில் முத்துசாமி, ஸ்ரீரங்கன் ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்த கொல்லிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவர்களது சடலங்களுக்கு அருகே வாழை இலையில் முட்டை, குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை நடத்தியதற்கான அடையாளம் காணப்பட்டது.

எனவே, நரபலி கொடுக்கும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், முத்துசாமியையும், ஸ்ரீரங்கனையும் வெட்டி கொலை செய்துவிட்டு, சடலங்களை நள்ளிரவில் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, கொலையானவர்களுடன் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணன் தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவருக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காரில் கடத்திச் சென்று தேனி நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்