×

முறைகேடுகள் நடந்துள்ளதால் பார் கவுன்சில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: வழக்கறிஞர் பாரதி

சென்னை: முறைகேடுகள் நடந்துள்ளதால் பார் கவுன்சில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் பாரதி கூறியுள்ளார். பார் கவுன்சில் தேர்தல் வேட்பாளர்கள் சார்பில் வழக்கறிஞர் பாரதி சென்னையில் பேட்டியளித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞர் உட்பட 3 வழக்கறிர்கள் தேர்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக கூறினார். வாக்குப்பதிவுக்கு முன் வாக்குப்பெட்டிகள் காலியாக இருப்பதை வேட்பாளரிடம் காண்பிக்கவில்லை எனவும் பாரதி கூறினார். முறைகேடு தொடர்பாக பார் கவுன்சில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம்...