×

ஆர்.கே.பேட்டை அருகே வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

பள்ளிப்பட்டு, ஆக. 27: ஆர்.கே.பேட்டை அருகே கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால் ஆகியோரின் உத்தரவின் பேரில் ஆர்.கே.பேட்டை அருகே சந்திரவிலாசபுரம் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை திறந்துவைத்து அவர் பார்வையிட்டார். இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவுப் பெட்டகத்தை எம்எல்ஏ வழங்கினார். முகாமில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.

ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உமாபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், ராமசாமி, மருத்துவர்கள் சுகன்யா, அமிர்தா மைதிலி, மாவட்ட மலேரியா அலுவலர் மதியழகன், மாவட்ட நல கல்வி அலுவலர் கணேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,RK Pettah ,S. Chandran ,RK Pettah. ,RK Pettai ,
× RELATED இரு மாநிலங்களை இணைக்கும் திருத்தணி –...