அரிய வகை காடை வனத்துறையிடம் ஒப்படைப்பு

தக்கலை, செப். 27: அரிய வகை காடை கோழி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்மநாபபுரம் நகராட்சியில் 13 வார்டு கவுன்சிலராக இருப்பவர் சபீனா. இவரது கணவர் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த காடை கோழியில் 3 காடைகள் வெள்ளை நிறத்தில் இருந்தது. இது அரிய வகையை சேர்ந்ததாகும். ஏற்கனவே இது போன்ற காடைக்கோழிகள் உதயகிரி பல்லுயிரின பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சபீனா 3 காடை கோழிகளையும் வனத்துறையிடம் ஒப்படைக்க தீர்மானித்தார். இதையடுத்து அந்த அரிய வகை காடை கோழிகளை உதயகிரி பல்லுயிரின பூங்காவில் உள்ள வன ஊழியரிடம் அவர் ஒப்படைத்தார்.

The post அரிய வகை காடை வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: