×

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு வலை

தர்மபுரி, ஆக. 9: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் நிலையத்தில் இருந்து நரிப்பள்ளி நோக்கி, அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்றது. அம்பேக்தர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பஸ்சை மறித்தார். தொடர்ந்து பஸ்சில் ஏறிய அவர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட நடத்துனர் ராமஜெயன் (50) என்பவரை தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தார். பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் சென்றுவிட்டார். இதில் காயம் அடைந்த ராமஜெயன், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ராமஜெயன் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

The post அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Arur Bus Station, Dharmapuri District ,Naripalli ,Ambekdar Nagar ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...