×

அய்யலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

 

வேடசந்தூர், ஆக. 2: கோபால்பட்டி அருகேயுள்ள சின்னகோம்பையன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). கட்டிட தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (24). இருவரும் சம்பவத்தன்று டூவீலரில் மணப்பாறை கொட்டப்பட்டியில் இருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். டூவீலரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். திருச்சி- திண்டுக்கல் சாலையில் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் அருகே வந்த போது அவ்வழியே அய்யலூர் குறிஞ்சி நகரை சேர்ந்த சக்திவேல் (56) என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது டூவீலர் மீது மோதியது.

இதில் கார்த்திகேயன், சுந்தரபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார். சுந்தரபாண்டியன் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அய்யலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Vedasandur ,Karthikeyan ,Chinnakombaiyanpatti ,Gopalpatti ,Sundarabandian ,Manaparai Kottapatti ,Dinakaran ,
× RELATED அய்யலூர் அருகே லாரி மீது டூவீலர் மோதி 3 சிறுவர்கள் படுகாயம்