×

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சயேர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) கலைத்திருவிழா நடைபெறுவதால் அனைத்து வகை அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 1ம் தேதி நடைபெறுவதால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கிற வகையில், மாவட்ட அளவில் அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

The post அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Anjayer Temple ,Kumbabhishekam ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...