×

அடையாறு ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவர்கள் பலி: ஒருவன் உடல் மீட்பு

சென்னை: அடையார் ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் முழ்கி பலியாகினர். அதில் ஒருவன் உடலை பொதுமக்கள் மீட்டனர். மற்றொரு சிறுவனின் உடலை தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை அரசு பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் சந்தோஷ்குமார்(10). அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரிஷ்(15). இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஹரிஷ் 10ம் வகுப்பும், சந்தோஷ்குமார் 5ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் ஹரிஷ், சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்களுடன் சைதாப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் பின்புறம் உள்ள அடையார் ஆற்றில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி குளித்தனர். அப்போது அடையாறு ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடி கொண்டிருந்தது. இந்த ஆபத்தை உணராத சந்தோஷ் மற்றும் ஹரிஷ் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கின உயிருக்கு போராடினார். இதனை கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சந்தோஷை மீட்டனர். ஹரிஷ் தண்ணீரில் மாயமானான். மீட்கப்பட்ட சந்தோஷை பரிசோதனை செய்தபோது அதிகளவு தண்ணீர் குடித்ததால் அவன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் மற்றும் கிண்டியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து ரப்பர் படகு உதவியுடன் அடையாறு ஆற்றில் மாயமான மாணவன் ஹரிஷை இரவு வரை தேடினர். ஆனாலும் அவனது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. …

The post அடையாறு ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவர்கள் பலி: ஒருவன் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aadhayar ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...